உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, June 21, 2010

குழந்தைகளின் இடக்கை பழக்கம் தவறானதா?


குழந்தைகள் பிறந்த பின்னர் வளர வளர பல திறன்களைக் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் வளரும் சூழ்நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றைப் பொறுத்து குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன்கள் அமையும். மரபுப்பண்புகளின் மூலம் பிறப்பிலேயே அமைபவை என சில திறன்கள் உண்டு. அத்தகைய திறமைகளில் ஒன்றுதான் கைத்திறன். ஏதாவது ஒரு கையினை எழுதுதல், விளையாடுதல் போன்ற நம் பெரும்பான்மையான செயல்களுக்கு மற்றொரு கையை விட அதிகமாக பயன்படுத்துவது கைத்திறன் என்கிறோம். இடதுகையினை அதிகமாக பயன்படுத்துவதினால் அது இடது கைத்திறன் எனவும் வலது கையினை அதிகமாக பயன்படுத்தினால் அது வலதுகைத்திறன் எனவும் அழைக்கப்படும். உலகில் மிகக் குறைவான் சதவீதம் பேரே இடது கைத்திறன் பெற்றுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் வலது கைத்திறன் கொண்டவர்கள்தான் அதன் காரணமாக வலது கையினை பெரும்பானமையாக பயன்படுத்துவதே சரி என்ற எண்ணமும் இடது கையினை பயன்படுத்துவது தவறானது என்ற எண்ணமும் பெற்றோர்களிடம் நிலவி வருகிறது. எனவே இடது கைத்திறன் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த கவலைக்குள்ளாகி தங்கள் குழந்தைகளை வலது கையினை பயன்படுத்துமாறு பணிக்கின்றனர்.

உண்மையில் இடது கைப் பழக்கத்தினால் எந்த பாதிப்பும் கிடையாது. இடது கையினை பயன்படுத்துவதால் செயல்படும் வேகமும் குறையாது வலது கைத்திறன் கொண்ட குழந்தைகள் எவ்வளவு திறமையுடனும் வேகத்துடனும் எல்லா செயல்களையும் செய்கிறார்களோ அதே திறன்டனும் வேகத்துடனும் இடது கைத்திறன் குழந்தைகள் செயல்புரிவர். இடது கைக்காரர்களால் வலது கைத்திறனாளிகள் போல் வேகமாக செயலாற்ற முடியாது என்று பெற்றோர் கொண்டிருக்கும் தவறான கருத்தினால் இடதுகை குழந்தைகளை வலது கையைப் பயன்படுத்தி செயலாற்ற கட்டாயப் படுத்தும் போதுதான் அவர்களின் செயலாற்றும் வேகம் குறைந்து போகிறது. இயல்பான கைத்திறனையும் பயன்படுத்தாமல், புதிய கையினையும் பயன்படுத்த பழக வேண்டி இருப்பதாலேயே செயல்திறன் குறைந்து விடுகிறது.

நாம் முன்பே கண்டது போல் ஓர் குழந்தை தன் வலது கையினை அதிகமாக பயன்படுத்துமா அல்லது இடது கையினை அதிகமாக பயன்படுத்துமா என்பது மரபு நிலையினால் தீர்மானிகப்படுகிறது. தற்கால மருத்துவ ஆய்வுகள் கருவிலிருக்கும் மூன்று மாத குழந்தை வலது கையினையோ அல்லது இடது கையினையோ தன் வாயில் வைத்து சூப்புவதை கண்டறிந்துள்ளன. எனவே இப்பழக்கம் பிறப்பதற்கு முன்பே, கருவிலிருக்கும்போதே தொடங்கிவிடுகிறது என்பதை நாம் அறிய வேண்டும். தற்காலத்தில் சினிமா போன்ற ஊடங்களில் இடது கைத்திறன் கொண்டவர்களை மிக ஸ்டைலானவர்களாக முன்னிலை படுத்தப்பட்டு வருகிறது. எனவே இடதுகைத்திறன் குழந்தைகளின் பெற்றோருடைய மனக்கவலை சற்றே குறைந்து, இடதுகை பழக்கத்தை வரவேற்கும் மனப்பான்மை அதிகரித்துள்ளது.

1 comments:

Unknown September 28, 2010 at 4:27 AM  

sir really i you did great job, hands off to you,
i really proud as i am your student,my best wishes for your valuable journey.....

anbudan...
anandhakrishnan(04-07)

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP