குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?
குழந்தைகள் விரல் சூப்புவதால் அவர்களின் பற்கள் வெளியே நீட்டிக்கொண்டு வந்து விடும். விரல் சூப்பும் குழந்தைகளின் வாய் கூர்மையாகி முக அமைப்பும் மாறி விடும். இப்பழக்கம் எதேச்சையாக ஏற்படுவது அல்ல. விரல் சூப்பும் பழக்கம் வலுவான உளவியல் காரணங்களைக் கொண்டுள்ளது.
குழந்தை பிறந்த பின்பு சரியான நேரத்திற்கு குறிப்பறிந்து பாலூட்ட வேண்டியது தாயின் கடமையாகும். சில குழந்தைகளுக்கு குறைவான அளவு உணவே போதுமானது. இதையும் தாய் புரிந்து கொள்ள வேண்டும். சரியான அளவு உணவைப் பெறும் குழந்தை எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் வளர்ச்சியடையும். சில வேலைகளில் தாய் தன் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவளிக்கலாம். உதாரணமாக குழந்தை பசி, வயிற்று வலி, உடல் அசெளகரியம், பயம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அழலாம். ஆனால் குழந்தை அழும்போதெல்லாம் அது பசிக்கு மட்டுமே அழுகிறது என நினைக்கும் தாய் அக்குழந்தை அழும்போதெல்லாம் அதற்கு பாலூட்டி விடுகிறார். இதனால் குழந்தை அளவுக்கு அதிகமான திருப்தியைப் பெறுகிறது. இன்னொரு புறம் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து கவணித்து உணவளிக்க முடியாமல் புட்டிப் பாலை தயார் செய்துவிட்டு கிளம்பி விடுவர். அதிகமான உணவு தேவைப்பட்டாலும் குழந்தைகளுக்கு கிடைக்காது. இத்தகைய குழந்தைகள் தேவைக்கும் குறைவான உணவைப் பெற்று திருப்தியின்றி வளர்ந்து வரும். இவ்வாறு அளவுக்கு அதிகமான திருப்தியோ அல்லது திருப்தியின்றியோ வளரும் குழந்தைகள் எப்போதும் எதையாவது உண்று கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாக வளர்கின்றனர். அதன் காரணமாகவே எதையாவது மென்று கொண்டே இருக்கின்றனர். உண்க எதுவும் கிடைக்காத குழந்தைகள் கைவிரலை சூப்பத் தொடக்கி விடுகின்றனர். இதற்கு வாய்சார்ந்த நடத்தை என்று பெயர்.
கைசூப்புவது உணவுப் பற்றாக்குறை என்பதற்கு இப்பழக்கம் எழ்மை நிலையிலுள்ள குழந்தைகளிடையே தான் அதிகமாக காணப்படுகிறது என்ற உண்மையே சான்றாகும். இப்பழக்கத்தைப் போக்க தேவையான அளவு குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். தொடர்ந்து உணவளித்து வந்தால் பற்றாக்குறை நீங்கி உண்க வேண்டும் என்ற உணர்வு குறைந்து விடும். அப்போது கைசூப்பும் பழக்கம் தானாகவே மறைந்து விடும். குண்டான குழந்தைகள் கைசூப்பிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொழுப்பு சத்தற்ற, உடல் பருமனை உண்டாக்காத உணவுகளை தொடர்ந்து அளித்துவர வேண்டும். உணவு உண்ணும் செயலால் உண்டாகும் திருப்தி உயர்ந்தபட்ச அளவை தொட்டவுடன் குழந்தைகள் தானாகவே உண்பதை நிறுத்திக் கொண்டுவிடும். அப்போது விரல் சூப்புவதையும் விட்டு விடும். அதற்கு மாறாக விரல் சூப்பும் குழந்தைகளை அடிப்பதால் பலன் கிடைக்காது. விரலுக்கு வேப்பெண்ணையை தேய்த்து விட்டாலும், கசப்பினை சூப்பி துப்பிவிட்டு பின் மீண்டும் விரல் சூப்ப குழந்தைகள் ஆரம்பித்துவிடும்.
குழந்தை பிறந்த பின்பு சரியான நேரத்திற்கு குறிப்பறிந்து பாலூட்ட வேண்டியது தாயின் கடமையாகும். சில குழந்தைகளுக்கு குறைவான அளவு உணவே போதுமானது. இதையும் தாய் புரிந்து கொள்ள வேண்டும். சரியான அளவு உணவைப் பெறும் குழந்தை எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் வளர்ச்சியடையும். சில வேலைகளில் தாய் தன் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவளிக்கலாம். உதாரணமாக குழந்தை பசி, வயிற்று வலி, உடல் அசெளகரியம், பயம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அழலாம். ஆனால் குழந்தை அழும்போதெல்லாம் அது பசிக்கு மட்டுமே அழுகிறது என நினைக்கும் தாய் அக்குழந்தை அழும்போதெல்லாம் அதற்கு பாலூட்டி விடுகிறார். இதனால் குழந்தை அளவுக்கு அதிகமான திருப்தியைப் பெறுகிறது. இன்னொரு புறம் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து கவணித்து உணவளிக்க முடியாமல் புட்டிப் பாலை தயார் செய்துவிட்டு கிளம்பி விடுவர். அதிகமான உணவு தேவைப்பட்டாலும் குழந்தைகளுக்கு கிடைக்காது. இத்தகைய குழந்தைகள் தேவைக்கும் குறைவான உணவைப் பெற்று திருப்தியின்றி வளர்ந்து வரும். இவ்வாறு அளவுக்கு அதிகமான திருப்தியோ அல்லது திருப்தியின்றியோ வளரும் குழந்தைகள் எப்போதும் எதையாவது உண்று கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாக வளர்கின்றனர். அதன் காரணமாகவே எதையாவது மென்று கொண்டே இருக்கின்றனர். உண்க எதுவும் கிடைக்காத குழந்தைகள் கைவிரலை சூப்பத் தொடக்கி விடுகின்றனர். இதற்கு வாய்சார்ந்த நடத்தை என்று பெயர்.
கைசூப்புவது உணவுப் பற்றாக்குறை என்பதற்கு இப்பழக்கம் எழ்மை நிலையிலுள்ள குழந்தைகளிடையே தான் அதிகமாக காணப்படுகிறது என்ற உண்மையே சான்றாகும். இப்பழக்கத்தைப் போக்க தேவையான அளவு குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். தொடர்ந்து உணவளித்து வந்தால் பற்றாக்குறை நீங்கி உண்க வேண்டும் என்ற உணர்வு குறைந்து விடும். அப்போது கைசூப்பும் பழக்கம் தானாகவே மறைந்து விடும். குண்டான குழந்தைகள் கைசூப்பிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொழுப்பு சத்தற்ற, உடல் பருமனை உண்டாக்காத உணவுகளை தொடர்ந்து அளித்துவர வேண்டும். உணவு உண்ணும் செயலால் உண்டாகும் திருப்தி உயர்ந்தபட்ச அளவை தொட்டவுடன் குழந்தைகள் தானாகவே உண்பதை நிறுத்திக் கொண்டுவிடும். அப்போது விரல் சூப்புவதையும் விட்டு விடும். அதற்கு மாறாக விரல் சூப்பும் குழந்தைகளை அடிப்பதால் பலன் கிடைக்காது. விரலுக்கு வேப்பெண்ணையை தேய்த்து விட்டாலும், கசப்பினை சூப்பி துப்பிவிட்டு பின் மீண்டும் விரல் சூப்ப குழந்தைகள் ஆரம்பித்துவிடும்.
1 comments:
really very usefull to every parents
Post a Comment