உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Thursday, June 10, 2010

நன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவது ஏன்?


உங்கள் குழந்தை எவ்வளவு படிக்கக் கொடுத்தாலும் சலிக்காமல் படித்துவிட்டு விளையாடப் போய்விடும். ஆனால் எழுத்து வேலை கொடுத்தால் எழுத சங்கடப்பட்டுக் கொண்டு, மிகக் குறைவாக எழுதிவிட்டு விளையாடப் போய் விடுகிறதென்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

சிலர் குழந்தைகளை மிக இளம் வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுவர். உதாரணமாக 2½ வயதிலேயே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் உண்டு. அவ்வாறு மிக இளம் வயதிலேயே பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெண்சிலைப் பிடித்து எழுதும் வலிமை விரல்களில் இருக்காது. பள்ளியில் அக்குழந்தைகளுக்கு அதிக எழுத்து வேலைகள் கொடுக்கப்பட்டால், விரல்களில் வலி ஏற்பட்டு எழுத்துப் பணிகளின் மீது இளம் வயதிலேயே வெறுப்பு உண்டாகிவிடும். அதனால் பின்னர் அவர்கள் எழுதுவதை தவிர்ப்பர். அவர்களின் கையெழுத்தும் அழகாக இருக்காது.

சில குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தொடக்கத்தில் அதிகமாக விளையாட அனுமதிப்பர். சிறு வயதில் விளையாட விடுவோம். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது அதிக நேரம் படித்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். ஆனால் ஆரம்ப காலத்தில் நன்கு விளையாடிப் பழகிய குழந்தை நீண்ட நேரம் ஓரிடத்தில் அமர்ந்து எழுதும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எழுத்துப் பணிகளை புறக்கணித்து விட்டு விளையாட்டிலேயே ஆர்வம் காட்டும்.

இக்குறையைப் போக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

தன் குழந்தை எழுதுவதை தவிர்க்கிறது என்று அதை பிறரிடம் சொல்லி கவலைப்படுவதை தவிர்த்து விட்டு சிறிது சிறிதாக எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். 10 நிமிடங்கள் எழுதி முடித்தவுடன் சிறிது ஓய்வு கொடுத்து விட்டு மிண்டும் எழுதுமாறு குழந்தையை பணிக்க வேண்டும்.

குழந்தை எழுதும் சமயத்தில் ‘நீ எழுதிக் கொண்டிரு, ஒரு சிறிய வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறேன்’ என்று பெற்றோர் போய்விடக்கூடாது. குழந்தை எழுதி முடிக்கும் வரை அதன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும். பெற்றோர் வேறு வேலைக்கு சென்று விடுவதாலேயே குழந்தையும் விளையாட ஓடிவிடுகிறது.

எழுதும் இடத்தில் பிற எந்த பொருட்களும் இல்லாதவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் மேஜை முழுவதும் புத்தகங்களையும் பொருட்களையும் பரப்பி வைத்துக் கொண்டு எழுதுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறான சூழ்நிலையில் எழுதும் குழந்தைகளின் கவனம் பல்வேறு பொருட்களின் மீது குவிந்து எழுத்துப் பணி தடைபடும்.

பெற்றோர் குழந்தைகளுக்கு அழகிய, மனதை கவரும் விதத்திலான எழுது பொருட்களை வாங்கி அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். புதுவகையான எழுது பொருட்களை வாங்கிக் கொடுப்பது குழந்தையின் எழுதும் ஆர்வத்தை தூண்டும்.

1 comments:

குடந்தை அன்புமணி June 12, 2010 at 12:17 AM  

நல்ல ஆலோசனைகள். நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டியவை. பகிர்வுக்கு நன்றி.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP