உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, May 31, 2010

வயதாகியும் குழந்தைகள் பேசாமல் இருப்பது ஏன்?


குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரும், காதுகேளாமை, ஆடிசம் என்ற உளவியல் பிரச்சனை, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய பிரச்சனைகள் ஏதுமில்லாத போதும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல் பேசாமல் இருந்தால் அக்குழந்தைக்கு மொழியை பேசுவதில் குறைபாடு உள்ளது எனக் கொள்ளலாம். இக்குறைபாடு உள்ள குழந்தைகளால் ஓர் மொழியின் வர்த்தைகளை உச்சரிப்பதை கற்றுக் கொள்ளவும் அம்மொழியின் இலக்கணத்தை கற்றுக் கொள்ளவும் இயலாது.

குழந்தைகளுக்கு ஏன் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. ஆயினும் மூளையே இதற்கான முக்கிய காரணம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. பேச்சுக் குறைபாடு கொண்டுள்ள குழந்தைகளின் மூளையில் ஏதேனும் பிறழ்வு இருக்கக்கூடும் என்று யூகிக்கப்பட்டுள்ளது. எத்தகைய பிறழ்வு என்பதை தற்போதைய மருத்துவ அறிவியல் இன்னும் கண்டறியவில்லை அதைப் போன்றே ஏதேனும் ஒரு மரபணு பேச்சுக் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் அது எந்த மரபணு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. பொதுவாக பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடமே இக்குறை அதிகமாக காணப்படுகிறது.

எல்லா குழந்தைகளும் எவ்வயதில் பேச ஆரம்பிக்கின்றனவோ அதே வயதில் பேச்சுக்குறைபாடு உள்ள குழந்தைகளும் பேச ஆரம்பிக்கின்றன. ஆனால் இவர்கள் பேச்சு வளர்ச்சியில் சாதாரணமாக குழந்தைகளைவிட மிக குறைவான முன்னேற்றத்தையே அடைகிறார்கள். வார்த்தைகளை உச்சரிப்பது இத்தகைய குழந்தைகளுக்கு மிக கடினமாக இருக்கும். இக்குறைபாடு குழந்தைகள் ஆறு-ஏழு வயதை அடையும் வரையில் கூட நீடித்து அவர்களின் படிக்கும் மற்றும் எழுதும் திறனைக்கூட பாதிக்கலாம். மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளால் இயலாது. காது கேளாமை இல்லாத நிலையிலும் பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகளால் வார்த்தைகளின் ஒலிகளை பிரித்தறிந்து கொள்ள இயலாது. இத்தகைய குழந்தைகளுக்கு மொழியின் ஓசை, இலக்கணம், போன்றவற்றை பற்றிய ஒட்டு மொத்த புலன்காட்சி நன்கு வளர்ச்சியடையாமலும் இருக்கும்.

பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகள் நாளடைவில் தன்னுடைய குறையை உணர்ந்து கொண்டு வயதாக வயதாக பிறரிடம் பேசாமல் விலகிச் செல்ல முயற்சிப்பர். இதனால் அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியும் பாதிக்கக்கூடும்.

இக்குறையை போக்க குழந்தைகளின் சூழ்நிலையில் மொழியின் பங்கு அதிகமாக இருக்குமளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் எவ்வாறு வார்த்தைகளை உச்சரிப்பது மற்றும் வாக்கியமாக பேசுவது ஆகியவைகளை பெற்றோர் முன்மாதிரியாக இருந்து கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவைகளே குழந்தைகளின் பேச்சு வளர்ச்சியை அதிகப் படுத்துவதில் நல்ல பலனை அளிக்கும். எனவே மிக விரைவில் தன் குழந்தைக்கு பேச்சு குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து சிகிச்சையளித்தல் முக்கியமாகும். பெற்றோர்கள் இரண்டு வயது முதல் மூன்று வயதான தங்கள் குழந்தைகு என்னென்ன வார்த்தைகள் தெரியும் என்பதையும் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எத்தனை தெரியும் என்பதையும் கண்டறிய வேண்டும். குழந்தைக்கு 50 வார்த்தைகளுக்கும் குறைவாகவும், இரண்டு சொல் வாக்கியங்கள் ஒன்று கூடவும் தெரியவில்லை என்றால் அக்குழந்தை பேச்சுக் குறைபாடு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக இரண்டு வயதில் அதிகமாக காணப்படும் இக்குறைபாடு 3 அல்லது 4 வயதாகும் போது மெதுவாக குணமாக ஆரம்பிக்கிறது அதற்கு காரணம் பேச்சுக் குறைபாட்டை உண்டாக்கும் சில ஊறுபாடுகள் தானாகவே சரியகிவிடுவதாகும்.

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP