ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடின்றி பிறத்தல் அதனினும் அரிது என்பது அவ்வையார் கருத்து. மனிதப் பிறப்பில் குறைகள் எதுவுமின்றி பிறப்பது நன்று. ஆனால் சில குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகள் அக்குழந்தைகளையும் அவர்தம் பெற்றோர்களையும் கடும் துன்பத்திற்குள்ளாக்குகிறது.
பொதுவாக கண் பார்வை குறைபாடு, செவிட்டுத் தன்மை, உடல் உறுப்புகள் குறைபாடு ஆகியவை உடற்குறைகள் எனப்படும். இவற்றோடு மிக முக்கியமான இன்னொன்று மனவளர்ச்சி குறைபாடு ஆகும். இத்தகைய குறைகள் கொண்ட குழந்தைகளை ஊனமுற்றோர் என்றும் உடற்-மன குறையுடையோர் என்றும் அழைத்து வந்தோம். ஆனால் தற்போது இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படலாம். பிறப்பிலேயே குறைகொண்ட குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை போன்ற மனப்பிரச்சனைகள் பிறந்த பின் இடையில் ஊனம் ஏற்பட்ட குழந்தைகளை விட குறைவாக இருக்கும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர் நினைப்பது போல மிகவும் கஷ்டமானது அல்ல. மாற்றுத்திறனாளிகள் என்ற பெயருக்கேற்ப அவர்களுக்கு எதேனும் வேறு சிறப்பு திறன்கள் இருக்கும். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறகும் என்பது போல கண் பார்வை குறையுடையோருக்கு காது மிக நன்றாக கேட்கும். காது கேட்காதவர்களுக்கு கூர்நோக்கும் திறன் இருக்கலாம். எனவே உடற்குறையுடைய குழந்தையினிடத்தில் உள்ள மாற்றுத்திறனை பெற்றோர் கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்த வேண்டும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களுக்கு சாதாரண குழந்தைகளை போல் எல்லா விவரங்களையும் தெரிவித்து சமூகத்தில் பிறரோடு பழகும் நாட்டமுள்ள குழந்தைகளாகவும், தன்னம்பிக்கை உள்ள குழந்தைகளாகவும் வளர்க்க வேண்டும். நிறைய ஊனமுற்ற குழந்தைகள் பிற்காலத்தில் கஷ்டப்படுவது தன்னம்பிக்கை இன்மையால் தான். கண் தெரியாவிட்டால் தடவி படித்துக் கொள்ளலாம். ஓர் ஆள் உதவிக்கு வைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். காது கேட்காவிட்டால் ஒரு கருவி மாட்டி கேட்டுக் கொள்ளலாம். கால் இல்லாவிட்டால் மரக்கால் வைத்து நடக்கலாம், ஓடலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் இவை எதையுமே செய்ய இயலாது.
சில ஊனமுற்ற குழந்தைகள் வளர வளர தங்கள் ஊனத்தை ஏற்க மறுத்து சாதாரணமானவர்களை விட அதிக திறமையுடன் நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் பிறரின் வசைவுக்கும் ஆளாவார்கள். மொண்டிக்கு முந்நூறு குறும்பு என்று கூறுவது இதனால்தான். ஊனமுற்றவர்கள் தங்கள் உடலின் குறையை மனதளவில் ஏற்க மருப்பதால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். எல்லா ஊனமுற்ற குழந்தைகளுக்கும் தனக்களிக்கப்பட்ட உடலை குறையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்டாக்க பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே முயற்சிக்க வேண்டும்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள், செய்து காண்பித்து பயிற்சி கொடுக்க வேண்டியவர்கள், எதுவுமே செய்ய முடியாத மிக குறைந்த மன வளர்ச்சி கொண்டவர்கள் என மூன்று பிரிவாக பிரிக்கலாம். இதில் சொல்லிக் கொடுத்து மேம்படுத்த வேண்டிய குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்காக அதிக நேரம் செலவிட வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பதன் மூலம் சாதாரண குழந்தைகள் போலவே அவர்களை வளர்க்கலாம். பயிற்சி கொடுத்து மேம்படுத்த வேண்டியவர்களுக்கு உளவியலரின் உதவியை நாடி சரியான பயிற்சி கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும். ஒன்றுமே செய்ய முடியாத குழந்தைகளை போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும். அவர்களின் இறுதிக்காலம் வரை நலமுடன் இருக்க ஆவன செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை.
ஊனமுற்ற, மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் பெற்றோர் தாழ்வு மனப்பான்மையும், செய்வதறியா மனநிலையும், அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். இதன் காரணமாக சிறிது காலம் ஊனமுற்ற குழந்தைகளை பற்றி கவலைப் பட்டு விட்டு பின்பு பற்றில்லாமல் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இதன் காரணமாகவே பல ஊனமுற்றவர்கள் பிற்காலத்தில் முன்னேற்றமின்றி தாழ்ந்த நிலையில் உள்ளனர். எனவே ஊனமுற்ற குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறிவிட வேண்டும். குழந்தைகளுக்காக அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊனமுற்றவர் பற்றி நிறைய விவரங்களை தேடிச் சென்று பெற வேண்டும். குறையுடையோர் நிறைவடைய உதவ வேண்டும். மண் சரியில்லை என்றாலும் அதை வீணாக்குவதும் பானையாக்குவதும் குயவனின் கையில் தானே உள்ளது!.
பொதுவாக கண் பார்வை குறைபாடு, செவிட்டுத் தன்மை, உடல் உறுப்புகள் குறைபாடு ஆகியவை உடற்குறைகள் எனப்படும். இவற்றோடு மிக முக்கியமான இன்னொன்று மனவளர்ச்சி குறைபாடு ஆகும். இத்தகைய குறைகள் கொண்ட குழந்தைகளை ஊனமுற்றோர் என்றும் உடற்-மன குறையுடையோர் என்றும் அழைத்து வந்தோம். ஆனால் தற்போது இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படலாம். பிறப்பிலேயே குறைகொண்ட குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை போன்ற மனப்பிரச்சனைகள் பிறந்த பின் இடையில் ஊனம் ஏற்பட்ட குழந்தைகளை விட குறைவாக இருக்கும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர் நினைப்பது போல மிகவும் கஷ்டமானது அல்ல. மாற்றுத்திறனாளிகள் என்ற பெயருக்கேற்ப அவர்களுக்கு எதேனும் வேறு சிறப்பு திறன்கள் இருக்கும். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறகும் என்பது போல கண் பார்வை குறையுடையோருக்கு காது மிக நன்றாக கேட்கும். காது கேட்காதவர்களுக்கு கூர்நோக்கும் திறன் இருக்கலாம். எனவே உடற்குறையுடைய குழந்தையினிடத்தில் உள்ள மாற்றுத்திறனை பெற்றோர் கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்த வேண்டும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களுக்கு சாதாரண குழந்தைகளை போல் எல்லா விவரங்களையும் தெரிவித்து சமூகத்தில் பிறரோடு பழகும் நாட்டமுள்ள குழந்தைகளாகவும், தன்னம்பிக்கை உள்ள குழந்தைகளாகவும் வளர்க்க வேண்டும். நிறைய ஊனமுற்ற குழந்தைகள் பிற்காலத்தில் கஷ்டப்படுவது தன்னம்பிக்கை இன்மையால் தான். கண் தெரியாவிட்டால் தடவி படித்துக் கொள்ளலாம். ஓர் ஆள் உதவிக்கு வைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். காது கேட்காவிட்டால் ஒரு கருவி மாட்டி கேட்டுக் கொள்ளலாம். கால் இல்லாவிட்டால் மரக்கால் வைத்து நடக்கலாம், ஓடலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் இவை எதையுமே செய்ய இயலாது.
சில ஊனமுற்ற குழந்தைகள் வளர வளர தங்கள் ஊனத்தை ஏற்க மறுத்து சாதாரணமானவர்களை விட அதிக திறமையுடன் நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் பிறரின் வசைவுக்கும் ஆளாவார்கள். மொண்டிக்கு முந்நூறு குறும்பு என்று கூறுவது இதனால்தான். ஊனமுற்றவர்கள் தங்கள் உடலின் குறையை மனதளவில் ஏற்க மருப்பதால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். எல்லா ஊனமுற்ற குழந்தைகளுக்கும் தனக்களிக்கப்பட்ட உடலை குறையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்டாக்க பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே முயற்சிக்க வேண்டும்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள், செய்து காண்பித்து பயிற்சி கொடுக்க வேண்டியவர்கள், எதுவுமே செய்ய முடியாத மிக குறைந்த மன வளர்ச்சி கொண்டவர்கள் என மூன்று பிரிவாக பிரிக்கலாம். இதில் சொல்லிக் கொடுத்து மேம்படுத்த வேண்டிய குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்காக அதிக நேரம் செலவிட வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பதன் மூலம் சாதாரண குழந்தைகள் போலவே அவர்களை வளர்க்கலாம். பயிற்சி கொடுத்து மேம்படுத்த வேண்டியவர்களுக்கு உளவியலரின் உதவியை நாடி சரியான பயிற்சி கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும். ஒன்றுமே செய்ய முடியாத குழந்தைகளை போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும். அவர்களின் இறுதிக்காலம் வரை நலமுடன் இருக்க ஆவன செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை.
ஊனமுற்ற, மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் பெற்றோர் தாழ்வு மனப்பான்மையும், செய்வதறியா மனநிலையும், அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். இதன் காரணமாக சிறிது காலம் ஊனமுற்ற குழந்தைகளை பற்றி கவலைப் பட்டு விட்டு பின்பு பற்றில்லாமல் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இதன் காரணமாகவே பல ஊனமுற்றவர்கள் பிற்காலத்தில் முன்னேற்றமின்றி தாழ்ந்த நிலையில் உள்ளனர். எனவே ஊனமுற்ற குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறிவிட வேண்டும். குழந்தைகளுக்காக அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊனமுற்றவர் பற்றி நிறைய விவரங்களை தேடிச் சென்று பெற வேண்டும். குறையுடையோர் நிறைவடைய உதவ வேண்டும். மண் சரியில்லை என்றாலும் அதை வீணாக்குவதும் பானையாக்குவதும் குயவனின் கையில் தானே உள்ளது!.
0 comments:
Post a Comment