உளவியல் சந்தேகங்கள்


உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

Friday, January 20, 2012

குழந்தைகள் பெற்றோர்கள் எதிர்பார்ப்பது போல் ஏன் உருவாவதில்லை?

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தன் மகனையும் வருங்காலத்தில் கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என்று நினைத்து சிறு வயது முதலே எல்லா வகையான பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்து வருகிறார். ஆனால் பைய பெரியவனாகியவுடன் விளையாட்டு துறையே எனக்கு பிடிக்காது என்று கூறி விட்டு வேறு வேலைக்குப் போய் விடுகிறான். நாடறிந்த அரசியல் தலைவர் தன் மகனையும் அரசியல்வாதியாக உருவாக்க வேண்டும் என்று நினைத்து வளர்த்து வருகிறார். ஆனால் பிற்காலத்தில் அப்பையன் அரசியல் வாழ்க்கையே தேவையில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறான். படித்து நல்ல வேலைக்குச் செல்லட்டும், வியாபாரத் துறையே வேண்டாம் என்று சொல்லும் தொழிலதிபர்களின் குழந்தைகள் பெரும்பாலும் தொழிலதிபர்களாகவே பிற்காலத்தில் உருவாகின்றனர். இதைப் போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிலும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே குழந்தைகள் உருவாகிறார்கள். ஏன் இவ்வாறு குழந்தைகள் எதிரும் புதிருமாக நடந்து கொள்கிறார்கள் தெரியுமா?

எரிக் எரிக்ஸன் என்னும் உலகப் புகழ் பெற்ற உளவியல் அறிஞர் மனிதனின் வளர்ச்சி நிலைகளில் ஒவ்வொரு கட்டத்திலும் தோன்றும் முக்கிய கூறுகளை தன் கோட்பாட்டில் எடுத்துக் கூறுகிறார். அவற்றில் முக்கியமானது ஒவ்வொரு தனியவனின் மனதிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாகும். சிறுவயது முதலே தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டே வரும் குழந்தைகள் வாலிப வயதில், நன்கு அறிவு வளர்ச்சி பெற்றவுடன், தன் தனித்தன்மையான அடையாளத்தை சீர்படுத்தை முழுமையாக்கிக் கொள்ள முனைகின்றனர். அவ்வடையாளம் பெற்றோர்களைப் போல் இருப்பதை எந்தக் குழந்தையும் விரும்புவதில்லை. தன் தலைமுடி அலங்காரத்திலிருந்து தன் வாழ்க்கை முறை வரை எல்லாவற்றிலும் தன் பெற்றோர்களிலிருந்து வேறுபட்டு இருக்கவே குழந்தைகள் விரும்புகின்றனர். இக்காலகட்டத்தில் தன் வயதை ஒத்தவர்களின் தாக்கம் குழந்திகளின் நடத்தையில் அதிகமாகக் காணப்படும். இச்சமயத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் என்ன கூறினாலும் அதற்கு நேர்மாறாகவே குழந்தைகள் நடந்து கொள்வர். பெற்றோர்களுக்கு நல்லதாக தெரிவது, அது உண்மையாகவே நல்லதாக இருந்தாலும், குழந்தைகளுக்கு ஏற்புடையாதாக இருக்காது. பெற்றோர் சொல்வதை குழந்தைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெற்றோர் சொல்வதை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு என்று ஓர் தனித்துவமும் அடையாளமும் கிடைக்காமல் போய்விடும். பெற்றோர்களின் அடையாளத் திணிப்பை ஏற்றுக் கொண்டால் தான் பிறந்து இவ்வுலகில் வாழ்ந்ததற்கான பதிவு இல்லாமல் போய்விடும் என்று குழந்தைகள் எண்ணுகின்றனர்.

’வாத்தியார் பையான் மக்கு’ என்ற நடைமுறைக் வழக்கு இக்கருத்தை மேலும் நன்கு விளக்கும். நன்றாகப் படித்து என்னைப் போல் நல்ல வேலைக்குப் போ என்று ஆசிரியர் தன் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்க்கிறார். ஆனால் அவர் குழந்தைகளோ ‘உங்களைப் போல் ஆசிரியர் ஆகிவிட்டால் பின்னர் எங்களுக்கு என்ன தனித்துவம் என்றெண்ணிக் கொண்டு படிப்பதை வெறுப்பர். தந்தையைப் போல் ஆசிரியர் ஆவதை விட திருடனாவது கூட நல்லது என்பதே குழந்தைகளின் முடிவாக இருக்கும். அவ்வாறே திருடனாகிய ஆசிரியர்களின் குழந்தைகளும் நடைமுறையில் உண்டு.

காதல் திருமணத்தை வெறுக்கும் பெற்றோர்களின் குழந்தைகளே காதலித்து திருமணம் செய்து கொள்வது, வெற்றியாளர்களின் குழந்தைகள் வாழ்க்கையில் முழு தோல்வியாளர்களாக மாறிவிடுவது, அறிவாளிகளின் குழந்தைகள் முட்டாளாக வளர்வது, ஏழையின் மகன் பெரிய பணக்காரனாக உருவெடுப்பது போன்ற அனைத்தும் இத்தகைய அடையாளக் குழப்பத்தின் காரணமாகவே.

இவ்வாறு எதிர்மறை வளர்ச்சியைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
நீ தொழிலதிபராக, பேராசிரியராக, கலெக்டராக வர வேண்டும் என்றெல்லாம் குழந்தைகளிடம் சொல்லி அதற்கேற்ப வளர்த்து பின்னர் ஏமாந்து போவதை விட இந்த உலகத்தில் ஒருவர் என்னவாகவெல்லாம் உருவாகலாம் என்று குழந்தைகளிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து ‘நீ என்னவாக உருவாக இருக்கிறாய் என்பதைப் பற்றி முடிவெடுத்து விட்டாயா?’ என குழந்தைகளிடமே அடிக்கடி கேட்டு முடிவெடுப்பதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். குழந்தைகள் விரும்பிய துறையில் முன்னேற தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

Tuesday, January 17, 2012

குழந்தைகள் அதிகப்படியான அமைதியாகவும் ஆர்ப்பாட்டமாகவும் இருப்பது ஏன்?

ஒரு குழந்தை துறுதுறுவென இருக்கிறதா அல்லது மிகவும் அமைதியாக இருக்கிறதா என்பது அக்குழந்தையின் மரபு நிலையைப் பொறுத்தது. குழந்தை மிக சுறுசுறுப்பாக இருப்பது குழந்தை அன்னையின் வயிற்றில் வளரும் போதே தொடங்கிவிடுகிறது. கருவில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போதே சில குழந்தைகள் அதிகப்படியான அசைவுகளைக் கொண்டிருக்கும். அன்னையின் இயல்புகள், கருவுற்றிருக்கும் தாய் பணியாற்றிக் கொண்டிருப்பது. அதிக மன அழுத்தத்துடன் இருப்பது, தாய் உட்கொள்ளும் உணவு வகைகள் ஆகியவைகள் கருவாய் இருக்கும் குழந்தையின் அசைவுகளைத் தீர்மானிக்கின்றன. சில தாய்மார்கள் மிகவும் அமைதியானவர்களாகவும், கருவுற்றிருக்கும் சமயத்தில் குறைவான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களாகவும் உடலை அமைதியாகவே வைத்திருக்கும்படியான உணவு வகைகளை உண்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வயிற்றில் வளரும் குழந்தை குறைவான அசைவுகளைக் கொண்டிருக்கும். அக்குழந்தை பிறந்த பின்னும் மிகவும் அமைதியான குழந்தையாகவும் வளரும். பெற்றோரில் தந்தையோ அல்லது தாயோ அமைதியானவராகவோ அல்லது மிகுந்த செயல்பாடுகள் கொண்டவராகவோ இருக்கும் போது குழந்தை அத்தகையா பண்புகளைப் பெற்று அமைதியான குழந்தையாகவோ அல்லது துறுதுறுவென்ற குழந்தையாகவோ இருக்கலாம்.

இவ்வாறு மரபுநிலையின் காரணமாக அதிக துறுதுறுவென்றோ அல்லது அமைதியாகவோ இல்லாத குழந்தைகளுக்கு இருவிதமான நோய்கள் இருக்க வாய்ப்புண்டு. அந்நோய்களின் தாக்கத்தால் கூட குழந்தைகள் மிக அமைதியாகவோ அல்லது அதிக துறுதுறுவென்றோ இருக்கலாம்.

முதலாவது நோய் ஆடிஸம் எனப்படும். இந்நோய் 2500 குழந்தைகளில் ஒருவருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடம் தான் நான்கு மடங்கு அதிகமாக காணப்படுகிறது. இந்நோய் கொண்ட குழந்தைகள் தங்கள் சொந்தக் கற்பனையிலேயே முழ்கிக் கிடப்பர். பெற்றொரைத் தவிர பிறரிடம் பழகுவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும், தனிமை விரும்பிகளாகவும் சற்று பிடிவாதம் கொண்டவர்களாகவும் இருப்பர். ஊமைகளாகவோ அல்லது பேச்சு வளர்ச்சி இல்லாதவர்களாகவோ இருக்கும் இக்குழந்தைகள் பேசினால் பிறரால் புரிந்து கொள்ள இயலாது. சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கும் இக்குழந்தைகள் மணிக்கணக்கில் ஏதேனும் ஒன்றை பார்த்துக் கொண்டு அமைதியானவராக இருப்பர். பிறக்கும் போது நல்ல மூளையுடம் பிறக்கும் இக்குழந்தைகள் வளர்ச்சியடையும் போது தான் மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட்டு இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். பொதுவாக குழந்தை ஒரு வயது அடையும் போது ஆடிஸ நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். இந்நோயினை குணமாக்க இயலாது. ஆனால் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே உளவியல் சிகிச்சை அளித்து வந்தால் இக்குழந்தைகள் பிற்காலத்தில் சாதாரணமானவர்களைப் போல வாழ ஓரளவுக்கு வாய்ப்புண்டு. நல்ல சிகிச்சையளிக்கப்பட்ட குழந்தைகளிலும் 25 சதவீத குழந்தைகள் தான் சாதாரணமான குழந்தைகளைப் போல் வளர்ச்சியடைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது நோய் மிகைச் செயல்//கவனக் குறைவு நோய் எனப்படும். 4 முதல் 6 சதவீத குழந்தைகளுக்கு இந்நோய் உள்ளது. அதிலும் ஆண் குழந்தைகளிடமே இந்நோயும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நோய் கொண்ட குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தின் மீதும் கவனம் செலுத்த இயலாதவர்களாகவும், மிக விரைவாக பேசுபவர்களாகவும், தொடங்கிய வேலை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு தாவிச் செல்பவர்களாகவும், மனம் போன போக்கில் கண்டதையும் செய்து கொண்டிருப்பவர்களாகவும் இருப்பர். மூளையில் மொழி, தசைகளின் இயக்கங்கள், கவனம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பகுதிகளில் காணப்படும் வேதிப் பொருள்களின் சமநிலையின்மையே இந்நோய்க்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்நோய் பாரம்பரியக் கொடையினால் உண்டாகிறது எனலாம். இந்நோயைக் குணப்படுத்த பல மருந்துகள் உள்ளன. மருத்துவர்களின் துணைகொண்டு இந்நோயிலிருந்து குழந்தையை மீட்கலாம். அதைப்போன்றே உளவியல் சிகிச்சை முறைகளும் பயனளிக்கக் கூடியவை. அமைதியான நடத்தையைக் குழந்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் அந்நடத்தையை பரிசளித்து ஊக்குவிப்பதன் மூலம் நாளடைவில் குழந்தைகள் தங்கள் துறுதுறு நடவடிக்கையைக் குறைத்துக் கொள்வர்.

சாதாரணமாக சற்று அதிக அமைதியாகவோ அல்லது சற்று அதிக் துறுதுறுவென்றோ குழந்தைகள் இருக்கும் போது பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. அது குழந்தைகளின் ஆளுமைப் பண்பாக இருக்கலாம். அசாதாரண அமைதி மற்றும் துறுதுறுப்பு உங்கள் குழந்தைகளிடம் காணப்படும் போது மட்டுமே நீங்கள் உஷார் நடவடிக்கை மற்றும் சிகிச்சையில் இறங்க வேண்டும்.

Monday, January 16, 2012

குழந்தைகள் மற்றவர்களிடம் பழகும் விதம்

என்னை சந்திக்க தங்கள் ஆறு வயது குழந்தையுடன் பெற்றோர் இருவர் வந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்கள் குழந்தையைப் பற்றிய குறைகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். படித்தல், திறமைகள் என ஒவ்வொன்றாக குழந்தையைப் பற்றிய தங்கள் எதிர்பார்ப்புகளையும், குழந்தையின் உண்மையான நடத்தைகளையும் விவரித்துக் கொண்டே வந்தனர். அதுவரை அறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையன் அப்போது உள்ளே நுழைந்தான். உடனே பையனின் அம்மா ‘சாருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்’ என பையனிடம் கூறினார். பையனோ மிகவும் வெட்கத்துடன் மறுத்தான். ஆனால் பெற்றோர்கள் விடவில்லை. திரும்பத் திரும்பத் அதட்டி அப்பையன் என் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த்துச் சொல்லும் வரை கட்டாயப்படுத்தினர். கடும் நிராகரிப்புக்குப் பின்னும் கைகுலுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை உணர்ந்த அவர்களின் மகன் அழுது கொண்டே அறையை விட்டு ஓடிவிட்டான். அவனுக்கு மிகுந்த அவமானமாகப் போய் விட்டது.

பையன் வெளியேறி விட்ட பின் அவனின் பெற்றோர் மீண்டும் தொடர்ந்தனர். ‘இப்படித்தான் சார், யாரிடமும் பேசுவதில்லை. எப்படி பழகுவது என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் விடுவதில்லை. செய்ய வேண்டியதை செய்யும் வரை, சொல்ல வேண்டியதை சொல்லும் வரை விடமாட்டோம்’ என்றனர்.

அவர்களிடம் இதே சூழ்நிலையில் நானாக இருந்தால் என்ன செய்வேன் என்பதைக் கேளுங்கள் என்றேன். பையனின் பெற்றோர் இருவரும் அவ்வாறே வினவினர். ‘பையனை அழைத்து உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறுமாறு கேட்டுக் கொள்வேன். ஆனால் என் மகன் அவ்வாறு வாழ்த்துக்கூறவில்லை என்றால் நான் அவனை கட்டாயப்படுத்த மாட்டேன். என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல உரிமை உண்டு. செய்தும் காட்டலாம். ஆனால் கட்டாயப்படுத்த நமக்கு உரிமை இல்லை. நாம் சொல்வது நல்லதானாலும் கெட்டதானாலும் அதைச் செய்யலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பது குழந்தையின் உரிமை. இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் ஓரிருமுறை நாம் சொல்வதை செய்யாவிட்டாலும் பின்னர் குழந்தைகள் தானாக நாம் சொல்லும், செய்யும் நல்லவற்றை பின்பற்றுவார்கள்’ என்றேன்.

சமூக சூழல்களில் குழந்தைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அவர்களின் மேல் திணிக்கக்கூடாது. மாறாக உதாரண புருஷர்களாக நாம் திகழ வேண்டும். தொடர்ந்து அவ்வாறு நாம் நடந்து கொள்வதை உன்னிப்பாக கவனித்து வருவார்கள் குழந்தைகள். ஆனால் சொல்லும் போதெல்லாம் அவ்வாறு நடந்து கொள்ளாமல் போகலாம். அதே சமயத்தில் தேவை ஏற்படும் போது நம் நல்ல நடத்தை குழந்தைகள் வழியாக இயல்பாக வெளிப்படும்.

எனவே, குழந்தைகள் பிறரிடம் எவ்வாறு பழக வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்களோ அவ்வாறு பெற்றோர்கள் குழந்தைள் முன் பிறரிடம் பழகிவர வேண்டும். ஒவ்வொரு முறையும் நல்ல நடத்தைகளை விடாமல் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, வீட்டுக்கு விருந்தினர் வரும்போது குழந்தைகள் முன் விருந்தினரை முகமலர்ச்சியோடு பெற்றோர் வரவேற்க வேண்டும். அவ்வாறு வரவேற்பு அளிக்கும் போது குழந்தைகள் வேறெங்கேனும் விளையாடிக் கொண்டு இருந்தாலும் அவர்களை அழைத்து விருந்தினரை வரவேற்கும்படி கூற வேண்டும். அதைப் போலவே விருந்தினர்கள் புறப்படும் போது சென்று வாருங்கள் எனக் கூறி வழி அனுப்புமாறு கூற வேண்டும். அதைக் குழந்தைகள் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி. அதுபற்றி கவலைப்பட வேண்டாம். காலம் கனியும் போது அவர்கள் தானாகவே விருந்தினரை உபசரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பிறரிடமும் பிறர் முன்னும் குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை கற்பிப்பது இவ்வாறு தான். பெற்றோர்களின் பழகும் விதம் நல்ல விதமாக இருக்கும்பட்சத்தில் குழந்தையின் பழகும் விதமும் நன்றாகவே இருக்கும். இதற்காக பெற்றோர்கள் பிறரிடம் நன்முறையில் பழகும் விதத்தைக் கற்றுக் கொள்வது நல்லது.

* * *

Wednesday, December 7, 2011

உளவியல் ஆலோசனை திறன் பயிற்சி

WORKSHOP ON STUDENT COUNSELLING
EXCLUSIVELY FOR ENGINEERING COLLEGE TEACHERS
Organized by
COIMBATORE PSYCHOLOGY FOUNDATION



Students studying in engineering institutions face a number of psychological problems and these problems arise out of their personal, familial, social and vocational domains. Offering Psychological guidance and counselling at critical time is the urgent need of the present scenario and this will help the students to fulfill their academic as well as the personal objectives. Therefore, Coimbatore Psychology Foundation has designed One day workshop exclusively for engineering college teachers to enable them to offer psychological guidance and counselling for students. Attending this workshop will enable the teachers to know the basic process and techniques of student counselling though they have not studied Psychology and set up a counselling centre in their institutions.

The foundation request to depute Minimum of Four and Maximum Number of teachers from each college as participants.

Date of the : 17.12.2011, Saturday

Time : 10.00 a.m. to 04.00 p.m.

Venue : Divyodaya Hall (Behind Cheran Towers, Arts College Road)
Near Railway Station, Coimbatore.

Trainer : Dr.B.Selvaraj Ph.D.
Associate Professor of Psychology,
Government Arts College, Coimbatore.

Content of the workshop : Basic Psychology
Counselling Skills
Student Psychology
Methods of counselling students

For further enquiries : Phone 94427 66594
e-mail
bo2878@gmail.com


M.Srijayanthi
Organiser.
Contact Mobile No.94427 66594


REGISTRATION FORM
(Use copies for more entries)

Name (in Capital Letters) :

Sex :

Age :

Educational Qualification :

Department :

College Address :

Contact Phone No. :

e-mail ID :


Signature :
Date and :

Thursday, December 1, 2011

"குழந்தைகளின் ஐ.யூ.வை வளர்ப்பது எப்படி?" - குமுதம் சிநேகிதி


குழந்தைகளின் ஐக்யூவை கண்டுபிடிக்க மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம். அவர்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப ஆக்டிவிட்டிஸ் கொடுப்பார்கள். சின்னச் சின்ன டெஸ்ட் வைத்து அதில் அவர்கள் தேறும் விதத்தில் ஐக்யூவை கணித்துச் சொல்வார்கள்.

இப்போது பெற்றோர்ஆசிரியர் மத்தியில் அதிகமாக அடிபடுகின்ற வார்த்தை ஐ க்யூ என்பதுதான்! இந்த ஐ க்யூவுக்கும் குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு? இதோ விளக்குகிறார்கள் நிபுணர்கள்...

டாக்டர் பா. செல்வராஜ், கோவை அரசு கலைக்கல்லூரியின் உளவியல் துறையில் உதவிப் பேராசிரியர். மன நல ஆலோசகராகவும் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து பல மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். அவரிடம் பேசியபோது குழந்தைகளின் ஐ க்யூ லெவலை தெரிந்து கொள்வதன் அவசியம் பற்றிப் பேசினார்.

‘‘9 வயதுச் சிறுவன் அவன்... சுத்தமாக படிப்பதே இல்லை. சிறுவனின் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக உள்ளதாக அவன் பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து புகார் வரும். அந்தச் சிறுவன் மிகவும் ஒல்லியாக முழங்கைகள் சற்று வளைந்து சற்றே மன வளர்ச்சி குன்றியதுபோல் தோற்றத்தைக் கொண்டிருந்தான்.

அந்த சிறுவனை அவன் தந்தை என்னிடம் அழைத்து வந்த போது அவனிடம் இருக்கும் குறையை கண்டறிவதற்காக சிறுவனுக்கு ஐ க்யூ டெஸ்ட் செய்து பார்த்தேன். சோதித்துப் பார்த்தபோது அந்தச் சிறுவனுக்கு சராசரிக்கும் குறைவான ஐக்யூ மட்டுமே இருப்பது புரிந்தது.

ஐக்யூ குறைவாக - மன வளர்ச்சி குறைவாக இருப்பவர்களை பல தடவை சொல்லிக்கொடுத்து மேம்படுத்தும் வகையினர், பயிற்சியளித்து மேம்படுத்தும் வகையினர், ஒரு வகையிலும் மேம்படுத்த முடியாதவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

இந்தச் சிறுவன் இரண்டாவது வகை... அதாவது பயிற்சி அளித்து மேம்படுத்தும் அளவுக்கு ஐக்யூ கொண்டிருந்தான். அவனிடம் ‘உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய்?’ என்பது போன்ற எளிய கேள்விகளை கேட்ட போதுகூட அவனால் சரியான முறையில் பதில் கூற முடியவில்லை.

குறிப்பாக பேசும்போது வேறு விஷயங்களில் கவனம் கொண்டு துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டேயிருந்தான். பள்ளியிலும் குறைந்தாற்போல பத்து நிமிடம்கூட பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை. பிற குழந்தைகளை கிள்ளி வைத்து விடுகிறான். எப்போதும் அமைதியில்லாமல் துறுதுறுவென இருக்கிறான் என்று அவன் தந்தை கூறினார். இவையெல்லாமே மன வளர்ச்சி குன்றியதற்கான அறிகுறிகள்தான்.

சிறுவனின் இதுபோன்ற ஐக்யூ குறைவுக்கும் மனவளர்ச்சியின்மைக்கும் பல காரணங்கள் இருக்கலாம்.

கருவில் குழந்தையாக இருந்தபோது அவன் தாய் கருக்கலைப்புக்காக உட்கொண்ட மருந்து (அப்படி உட்கொண்டதாக அவன் தாய் கூறினார்) குழந்தையின் மூளையில் உள்ள செல்களைக் கொன்று அதன் மூலம் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த சிறுவன் பிறக்கும் போது அவன் தந்தைக்கு ஏறக்குறைய நாற்பது வயது. வயதான தாய்க்கு மட்டுமல்ல... வயதான தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மன வளர்ச்சி குன்றிப்போக அரிதான வாய்ப்பு உள்ளது. அல்லது அவர்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு தலைமுறையில் மனவளர்ச்சி குன்றியவர் இருந்திருக்கலாம். பல தலைமுறைக்குப் பிறகு இவர்கள் குழந்தை விஷயத்தில் மரபணு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இவற்றில் எது உண்மையான காரணம் என்பதை உறுதியாக கூறுவது இயலாது. எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.

குழந்தைகளின் ஐக்யூ பிறப்பிலேயே குறைவாக இருந்தால் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்க முடியாது. அவர்கள் சொல்லிக்கொடுத்தோ அல்லது பயிற்சி கொடுத்தோ மேம்படுத்த வேண்டியவர்கள். இதில் அவர்கள் எந்தவகையில் வருகிறார்கள் என கண்டறிந்து அதற்குப் பொருத்தமான கல்வியும் பயிற்சியும் அளிக்க வேண் டும். இந்தச் சிறுவனை மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது நல்ல பலனை அளிக்கும். சாதாரண பள்ளியிலும் படிக்க வைக்கலாம். ஆனால், ஆசிரியர்கள் இந்த சிறுவனின் மனவளர்ச்சி குறைப்பாட்டை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி அவனுக்கு சொல்லித்தர வேண்டும்.

நல்ல பள்ளியில் சேர்த்து நல்ல குடும்பச் சூழ்நிலையில் வளர்த்தால் இந்த சிறுவனை மற்ற சாதாரண குழந்தைகளைப்போல் வளர்த்து ஆளாக்கி விடலாம் என்று சொல்லி சில மன வளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப் பள்ளிகளின் அட்ரஸ்களையும் கொடுத்து அந்த சிறுவனையும் அவன் தந்தையையும் அனுப்பி வைத்தேன்’’ என்கிறார் டாக்டர் பா. செல்வராஜ்.

குடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை?

குடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது. பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம். மற்றபடி டீ குடிக்கும் பழக்கத்தைகூட நிறுத்துவதென்பது கடினமான ஒன்றுதான். நாம் ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கங்கள் நம் நரம்பு மண்டலத்தில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது. அந்த தூண்டுதல்களுக்கு பழப்பட்டுவிட்ட நமது நரம்பு மண்டலம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த செயலை செய்யுமாறு நம்மை தூண்டுகிறது. எனவே சரியான ஆலோசனை மற்றும் அதற்குண்டான பயிற்சியினால் மட்டுமே ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும். மற்றபடி ஒரு முறை குடித்துவிட்டு ச்சே இனிமேல் குடிக்கவே கூடாது என நினைப்பதெல்லாம் குற்ற உணர்வால் ஏற்படும் சிந்தனைகள்.

Monday, April 25, 2011

100 நாட்களில் 115 பேர் தற்கொலை ”முடிவை மாற்ற” என்ன வழி? - தினமலர் 25.04.2011




Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP