திருக்குறள் – உளவியல் உரை
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று
ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு (அதிகாரம் 3
– 27)
புலன்
உறுப்புக்களின் துணைகொண்டு சூழ்நிலையிலிருந்து வரும் செய்திகளை சேகரிப்பதே புலன்
உணர்ச்சி எனப்படும். மனிதர்களுக்கு கண்,
காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் என ஐந்து புலன் உறுப்புக்கள் உள்ளன. இவற்றையே ஐம்புலன்கள் என்கிறோம். இப்புலன்களால் சுழ்நிலையிலிருந்து தகவல்களை
நாம் சேகரித்துக் கொள்வது நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆகும். உதாரணமாக பாதையில் இருக்கும் கல்லை சரியாக
பார்க்காமல் கால் இடறி கீழே விழுவது நம் அனைவருக்கும் நிகழக் கூடிய ஒன்று. நன்கு
பார்த்து நடப்பவருக்கு கீழே விழும் பிரச்சனை இல்லை. அடுப்பறையில் சமையல் எரிவாயு கசிந்து
கொண்டிருந்தால் கெட்ட வாடை வீசும்.
அக்கெட்ட வாடையை நுகரும் பெண் சமையலறையில் நுழைந்தவுடன் உஷாராகி தீ விபத்து
எதுவும் நடக்காமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார். கெட்ட வாடையை அலட்சியப்படுத்தினாலோ பெரும் தீ
விபத்தும் உயிரிழப்பும் ஏற்படலாம். இதைப்
போலவே எல்லா புலன் உறுப்புக்களும் நமக்கு உதவுகின்றன. ஒருவர் கூர்மையான புலன் உணர்ச்சியைக்
கொண்டிருப்பாரானல் மிகத் திறனுடன் விளங்கலாம்.
ஒருவரின் புலன் உறுப்புக்கள் நன்முறையில் செயல்பட்டால் அவரின் புலன்
உணர்ச்சியும் மிகக் கூர்மையாக இருக்கும்.
உளவியலர் மனித புலன் உறுப்புக்கள் நன்கு செயல்படுகின்றனவா என்பதைக் கண்டறிய
பின்வரும் நியதிகளைத் தெரிவித்துள்ளனர்.
கண் :நள்ளிரவில்
இரண்டு கிலோமீட்டர் தொலைவில் எரியும் மெழுகுவர்த்தி
சுடரை காண வேண்டும்.
காது :இருபது
அடி தொலைவில் வைக்கப்பட்டுள்ள கடிகாரத்தின் டிக்டிக் ஓசையைக் கேட்க வேண்டும்.
மூக்கு :நான்கு
அறை கொண்ட ஒரு வீட்டில் இரண்டு துளி வாசனை திரவியத்தை தெளித்தால் அவ்வாசனையை உணர
வேண்டும்.
நாக்கு :ஒரு
பீப்பாய் தண்ணீரில் கலக்கப்பட்டுள்ள ஒரு கரண்டி உப்பு அல்லது சர்க்கரையின் சுவையை
உணர்ந்து கொள்ள வேண்டும்.
தோல் :கன்னத்தைத்
தொடாமல் ஒரு செண்டி மீட்டர் தொலைவில் பறக்கும் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பை உணர
வேண்டும்.
இவ்வாறு
நம் புலன் உறுப்புக்கள் கூருணர்வுடன் செயல்படும் போது நம் நடத்தையும் மிகத் திறமையுடன்
விளங்கும்.
மனிதருக்கு
ஐந்து புலன்கள் என்பது பொதுக்கருத்து.
மனிதருக்கு ஏழு புலன்கள் உள்ளன என உளவியல் தெரிவிக்கிறது. நம் உடல் சமநிலையுடன் இருக்கிறதா என்பதை
உணர்வது ஆறாவது புலனாகும். நடுக்காதில்
காணப்படும் மூன்று அரைவட்ட குழாய்கள் உடற்சமநிலையை நமக்கு உணர்த்தும் புலன்
உறுப்புகளாக செயல்படுகின்றன. இவை சரியாக
செயல்படாவிட்டால் நமக்கு வாந்தியும் தலைசுற்றலும் ஏற்படும். உடலின் இயக்கத்தையும் உடல் இருக்கும்
நிலையையும் உணர்ந்து கொள்வது ஏழாவது
புலனாகும். கால் கை மூட்டுகளில்
காணப்படும் சில அணுக்கள் நம் உடல் இயங்குவதை நமக்கு உணர்த்துகின்றன.
உலகை
வெற்றி கொள்ள ஏழு புலன் உறுப்புகளும் நன்கு செயல்படுவதே இன்றியமையாதது.
0 comments:
Post a Comment