உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Sunday, June 13, 2010

குழந்தைகள் கோபத்தில் தலையில் அடித்துக் கொள்வது, தலையை சுவரில் மோதிக் கொள்வது ஏன்?


சில குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக வளர்கின்றனர். ஆக்ரோஷமாக வளரும் இக்குழந்தைகள் ஏதேனும் பிரச்சனை வரும் போது தலையை சுவரில் மோதிக் கொள்வதும் கைகளால் தன் முகத்தில் தானே அறைந்து கொள்வதும் சாதாரணமான நடத்தையாகும். குழந்தைகளின் இக் கோப நடத்தையை எப்படி சரி செய்வதென்று தெரியாமல் பெற்றோர் மனக்கலக்கம் அடைந்து இருப்பர்.

தலையில் அடித்துக் கொள்ளும், தலையை சுவரில் மோதிக் கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்களில் தாயோ, தந்தையோ யாராவது ஒருவர் மிகுந்த கோபம் கொண்டவர்களாக இருப்பர். பெற்றோர்களின் இக்கோபத்தை பார்த்தே குழந்தை ஆக்ரோஷமாக நடந்துகொள்ள பழகிக்கொள்கிறது. மேலும் குடும்பத்தின் ஒற்றைக் குழந்தைகளே இது போன்ற நடத்தைகளில் ஈடுபடுகின்றன. ஒரு குழந்தை என்பதால் அதிகமான செல்லம் கொடுக்கும் பெற்றோர் குழந்தை எதைச் செய்தாலும் அவர்களிடம் எதிர்மறையாக நடந்து கொள்வதில்லை. அதன் காரணமாக குழந்தைகளின் கோப நடத்தை அதிகமாகிக் கொண்டே செல்லும்.

கூட்டுக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் இவ்வாறு நடந்து கொள்ளலாம். தாத்தா, பாட்டி மற்றும் மற்ற உறவினர் நிறைந்துள்ள பெரிய வீட்டில் வளரும் குழந்தை சுவரில் தலையை முட்டிக் கொள்வது போன்ற நடத்தையில் ஈடுபடுவதை அனைவரும் சிலாகித்துப் பேசுவது குழந்தைகளின் இவ்வெதிர்மறை நடத்தையை அதிகரிக்கும். தன் நடத்தையைப் பற்றி பிறரிடம் குடும்ப உறுப்பினர்கள் பேசுவதை கேட்கும் குழந்தைகள் அனைவரின் கவணமும் தன்மீது இருப்பதாக நினைத்துக் கொள்ளும். பின்னர் எப்போதெல்லாம் தன் மீது பிறரின் கவனம் குறைந்து விட்டது என குழந்தை நினைக்கிறதோ அப்போதெல்லாம் ஆக்ரோஷமான எதிர்மறை நடத்தைகளை வெளிக்காண்பிக்கும்.

குழந்தைகளின் இவ்வாறான நடத்தையை குறைக்க நினைக்கும் பெற்றோர்கள். குழந்தைகள் தங்கள் தலையில் அடித்துக் கொள்ளும் போதும், தலையில் முட்டிக் கொள்ளும் போதும் அந்நடத்தையை கண்டு கொள்ளாமல் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். “நீ இவ்வாறு நடந்து கொள்வது எனக்கு பிடிக்காது” என்று குழந்தையிடம் தெளிவாக கூற வேண்டும். இந்நடத்தையைப் பற்றி கவலையடைந்திருப்பதாகவோ காட்டிக் கொள்வதோ அல்லது இதுபற்றி பிறரிடம் சொல்வதோ கூடாது. கூட்டுக் குடும்பமாக இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக குழந்தையின் இந்நடத்தை மீது கவனம் செலுத்துவதை புறக்கணிக்க வேண்டும். மாறாக குழந்தை இவ்வாறு நடந்து கொள்வதை குறைக்க வேண்டி அக்குழந்தையை அடிப்பதும் ஏசுவதும் குழந்தையின் கோப நடத்தையை அதிகப்படுத்தவே செய்யும்.

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP