உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, July 19, 2010

குழந்தைகளுக்கு எவ்விதமான உடைகளை அணிவிக்க வேண்டும்?


ஆள் பாதி; ஆடை பாதி என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல. நம் குழந்தைகளுக்கும் பொருந்தும். நல்ல ஆடைகளை அணிந்திருக்கும் குழந்தைகள் மற்றவர்களை கவரும் விதத்தில் நல்ல தோற்றத்தினை பெற்றிருக்கும்

நம் குழந்தைகளுக்கு நாகரீகமான ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பல பெற்றொர்கள் குழந்தைகள் தங்கள் உடலை காத்துக் கொள்ளத்தான் ஆடை என்பதை மறந்து பொருத்தமில்லாத உடைகளை அணிவித்து அவர்களை அவஸ்தைக்கு உள்ளாக்குகிறார்கள். கையும் முதுகும் இல்லாத கவுன் ஒன்றை அணிந்து கொண்டு குளிர்காலத்தில் நடுங்கிக்கொண்டே செல்லும் குழந்தையை நீங்கள் பார்த்திருக்கலாம். முழுக்கை பணியனும் காலைத் தடுக்கிவிடும் மிக நீள பேண்டும் அணிந்து கொண்டு செல்லும் பையன்கள் பலர். இத்தகைய குழந்தைகளின் பெற்றோர் தங்கள் கெளரவத்திற்காகவே குழந்தைகளுக்கு இது போன்ற ஆடைகளை அணிவித்து வசதிக் குறைவை உண்டாக்குகிறார்கள்.

குழந்தைகளுக்கு என வாங்கப்படும் ஆடைகளின் நிறம் அவர்களின் இயற்கையான நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உடலுக்கு பொருத்தமில்லாத நிறங்களில் உடைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. மிக விலையுயர்ந்த ஆடைகளை வாங்குகிறோம் என்ற எண்ணத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு அணிவிக்க வசதியாக பெரிய அளவு துணிகளை வாங்குவதையும், உடை தைப்பதையும் தவிர்த்து அந்தந்த வயதுக்கேற்ற அளவு உடைகளையே வாங்கவும் தைக்கவும் வேண்டும்.

வீட்டில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் அல்லது சகோதரிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஓரே மாதிரியான உடைகள் பொருத்தமில்லாமல் போவதோடு குழந்தைகளின் தனித்தன்மையையும் பாதிக்கும்.

சில பெற்றொர்கள் தன் முதல் குழந்தையின் ஆடைகள் நன்றாகவே இருக்கின்றன என்பதால் அதையே தங்கள் இரண்டாவது குழந்தைக்கும் அணிவிக்கின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முதல் குழந்தையின் உடைகளை இரண்டாவது குழந்தைக்கு அணிவிப்பதில் சில உளவியல் பிரச்சனைகள் உள்ளன. எந்த குழந்தையும் தன் உடைகளை தன் கண் முன்னே பிறர் அணிவதை விரும்பாது. அவ்வாறு தன் உடைகளை பிற குழந்தை அணிந்திருப்பதை பார்க்கும் குழந்தை தனக்குள்ள முக்கியத்துவம் பறிபோய் விட்டதாக எண்ணிக் கொள்ளும். ஆண் குழந்தையின் உடைகளை பெண் குழந்தைக்கு அணிவிப்பதும், பெண் குழந்தைகளின் உடைகளை ஆண் குழந்தைக்கு அணிவிப்பதும் பால் சார்ந்த நடந்தைகளை கற்றுக் கொள்வதில் ஊறுபாடுகளை உண்டாக்கும். ஆண் உடைகளையே அணிந்து வளரும் பெண் குழந்தை ஆண் தன்மையுடன் வளர வாய்ப்புண்டு. அதைப்போன்றே பெண் உடைகளை அணிந்து வளர்க்கப்பட்ட எண்ணற்ற ஆண் குழந்தைகள் பிற்காலத்தில் பெண்களாகவே மாறிவிட்ட நிகழ்வுகளும் உண்டு. எனவே உடைகள் நன்றாக இருக்கின்றன என்பதற்காக அவைகளை அணிவித்து உள்ளத்திலும் வளர்ச்சியிலும் குறைபாடுகளை உண்டாக்கக் கூடாது.

நவீனம் என்ற பெயரில் சிறு குழந்தைகளின் உடல் தெரியும் உடைகளை தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலை சரியான முறையில் மறைக்காத இவ்வுடைகள். உடல் நலக் கேட்டை உண்டாக்கும். பிற்காலத்தில் சமுதாயத்திற்கு பொருந்தாத கவர்ச்சியான உடைகளை அணிய இதுவே அடிப்படை காரணமாகவும் அமையலாம்.

இறுக்கமாகவும் இல்லாத மிகத் தளர்வாகவும் இல்லாத, மிகமிக விலையுயர்ந்ததாகவும் இல்லாத தரக்குறைவாகவும் இல்லாத முழு உடலையும் மறைத்து தொந்தரவு தராத, உடல் முழுவதையும் வெளிக்காட்டாத நல்ல உடைகளையே குழந்தைகளுக்கு என வாங்க வேண்டும்.

நல்ல உடைகளை அணிவித்து உடை பற்றிய விழிப்புணர்வை சிறுவயதிலேயே குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தி விட்டால் அது பிற்காலத்தில் நேர்த்தியாக உடையணிந்து வாழ்க்கையில் மதிப்பும் மரியாதையுடனும் வாழ அவர்களுக்கு உதவும்.

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP