உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Friday, October 23, 2009

குழந்தைகளை விரும்பத்தகாத நடத்தைக்காகவும், அவர்கள் பெற்றோர் சொல் பேச்சு கேட்காத போதும் அடிக்கலாமா? சூடு வைத்தல் போன்ற பிற தண்டனைகளைக் கொடுக்கலாமா?


குழந்தைகள் பிறக்கும் போது எந்த நடத்தையையும் தன்னகத்தே கொண்டு பிறப்பதில்லை. மாறாக இந்த உலகில் வளரும் போது பிற மனிதர்களை கூர்ந்து நோக்கி, அவர்களுடன் உறவாடி நடத்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் விரும்பத்தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால் அந்நடத்தை அவர்களின் பெற்றோரிடமோ, அவர்கள் வளரும் சூழ்நிலையில் உள்ள பிறரிடமோ காணப்படலாம். அவர்களிடமிருந்தே அந்நடத்தையை குழந்தைகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் கற்றுக்கொண்ட விரும்பத்தகாத நடத்தையை மாற்ற வேண்டுமெனில், குடும்பத்தில் உள்ள யாரையாவது பார்த்து அந்நடத்தையை கற்றுக் கொண்டிருந்தால் முதலில் அவர் தன் நடத்தையை மாற்றி கொள்ள வேண்டும். நாளடைவில் அக்குழந்தையும் அந்த விரும்பத்தகாத நடத்தையை கைவிட்டு விடும்.

ஒருவேளை குழந்தைகள் விரும்பத்தகாத நடத்தையை நமக்குத் தெரியாத வேறு யாரையாவது பார்த்து கற்றுக் கொண்டிருந்தால், குழந்தையிடம் அந்நடத்தை ஏன் விரும்பத்தகாகது, அதை எப்படி மாற்றிக் கொள்ளலாம் என பெரியவர்களிடம் சொல்வதைப்போல விளக்கிக் சொல்ல வேண்டும். தொடர்ந்து மனம் தளராமல் பல நாட்கள் இப்படி சொல்லிக் கொண்டே வந்தால் குழந்தை விரைவில் அந்த நடத்தையை மாற்றிக் கொள்ளும்.

ஒரு வேளை அடித்துதான் திருத்த முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டாலும் கூட, ‘அடித்து விடுவேன், சூடு வைத்து விடுவேன், உதைத்து விடுவேன்’ என சத்தம் போட்டு மிரட்டலாம். அடித்து விடுவேன் என சத்தமாக கூறிக் கொண்டே கையை ஓங்கலாமே தவிர, ஓங்கிய கையால் ஒருநாளும் அடிக்கக் கூடாது. சூடு வைத்து விடுவேன் என்று ஒரு கம்பியை எடுத்து காட்டலாமே தவிர ஒரு நாளும் சூடு போட்டு விடக்கூடாது.

நீங்கள் அடித்து மிரட்ட ஆரம்பித்து விட்டால் உங்கள் மீது குழந்தைக்கு இருக்கும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் தப்பு செய்யும் குழந்தை தைரியமாக செய்ய ஆரம்பித்துவிடும். அப்பா, அம்மாவுக்கு தெரிந்தால் மீறி மீறிப் போனால் அடிப்பார்கள் அவ்வளவுதான், வேறென்ன செய்து விடப் போகிறார்கள் என்ற மன நிலை ஏற்பட்டு விடும். அந்த மனநிலையை உருவாவதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP