உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Wednesday, October 7, 2009

குழந்தைகள் எதைக் கேட்டாலும் இப்போதே வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களே? அது இயல்பானதுதானா? அதை நாம் ஊக்குவிக்கலாமா?


குழந்தைகள் இன்ப விதியின் அடிப்படையில் வளர்பவர்கள். அதாவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஒரு போதும் துன்பத்தை அனுபவிக்க கூடாது என்பதே அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடு. எனவே அவர்கள் தன் மனதில் எழும் ஆசைகளை உடனுக்குடனே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், தன் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இயற்கையானது தான். இந்த நடத்தையின் காரணமாகத்தான் எதாவது ஒரு பொம்மையைக் கேட்கும் குழந்தை “ எனக்கு ஒரு பொம்மை வேண்டும், இப்போதே, இன்றைக்கே வேண்டும்” என கேட்பது. அதற்காக குழந்தையின் ஆசையை நாம் உடனே நிறைவேற்றி விடவேண்டும் என்று துடிதுடிக்க வேண்டியதில்லை. அது நம்மால் முடியவும் முடியாது. மேலும் ஓரிரு முறை அவ்வாறு உடனுக்குடன் குழந்தையின் ஆசையை உடனே தீர்த்து வைத்தால் அதுவே பழக்கமாகி பின்னர் நாம் எப்போது அவ்வாறு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பிற்காலத்தில் தான் நினைப்பது உடனே நடக்கவில்லை என்றால் அக்குழந்தைக்கு மனச்சோர்வும், மன முறிவும் ஏற்படும். அது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.

தற்கால உளவியல் ஆய்வுகள் யார் தன் உள்ளுணர்வு ஆசைகளை கட்டுப்படுத்தி சிறிது பொறுத்திருந்து பின்னர் சரியான வேளை வரும்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை பெற்றிருக்கிறார்களோ அவர்களே சிறந்த வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் எனக் கண்டறிந்துள்ளன. இத்திறமை படைத்தவர்களுக்கு நுண்ணறிவு சற்று குறைவாக இருந்தாலும் அது அவர்களின் வெற்றியைப் பாதிப்பதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இத்திறமையை நாம் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்து விட்டால் குழந்தைகள் பெரியவர்களாகும் போது அது ஓர் வாழ்க்கை முறையாக மாறிவிடும்.

இப்போதே ஓர் பொம்மை வேண்டும் என்று குழந்தை கேட்டால், இரண்டு மணி நேரம் வேலை இருக்கிறது. முடித்துவிட்டு நாம் இருவருமே சென்று வாங்கி வரலாம் என்று கூறுங்கள். இன்றே ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் இன்று முடியாது நாளை வாங்கித்தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வாங்கித் தாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் “சற்றே தள்ளிப்போடும் மனநிலையையும்” பொறுமையையும் குழந்தைகளிடத்தில் இளம் வயதிலேயே விதைத்து விடலாம்.

ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்க வையுங்கள் உங்கள் கொக்கை. உலகில் வெற்றியாளராக்குங்கள்.

0 comments:

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP