உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Wednesday, March 24, 2010

புத்தக விமர்சனம்


வாழ்நாளின் பெரும் பகுதியை நாம் எதைப் பற்றி சிந்திப்பதில் செலவிடுகிறோமோ, எதைப் பற்றிய விழிப்புணர்வு இன்றி கடனே என்று செய்து கொண்டிருக்கிறோமோ அந்த வேலையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் புத்தகம் “வேலையில் முன்னேற” ஆகும். டாக்டர் கேரன் ஒடாஸோவின் புகழ்பெற்ற புத்தகத்தை அக்கலூர் ரவி மொழி பெயர்த்திருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

வேலையைப் பற்றி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓர் மனப்பாங்கு மக்களிடையே நிலவி வந்திருக்கிறது. அம்மனப்பாங்குகளே மனிதர்களின் பணி ஆர்வத்தை கூட்டவோ குறைக்கவோ செய்திருக்கின்றன. மனதையும் உடலையும் மெம்படுத்தவோ சீர்கெடவோ செய்திருக்கின்றன. வேலைப் பற்றிய குறிப்பிட்டுச் சொல்லும் விதமான மனப்பாங்கு எனில் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் நிலவிய பிராட்டஸ்டன்ட் பணி ஒழுக்கத்தை கூறலாம். அதன்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் பணிக்கு செல்ல வேண்டும். பணியாற்றுவது கடவுளுக்கு செய்யும் சேவையைப் போன்றது. எனவே செய்யும் வேலையை மமொத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும் என்பது மையக் கருத்தாக கொள்ளப்பட்டது. இத்தகைய பணி ஒழுக்கத்தை பின்பற்றிய மக்கள் போட்டி பொறாமையின்றி ஓர் நியதியோடு பணியாற்றி வந்தனர். ஆனால் தற்கால பணிகளின் தன்மை முற்றிலும் மாறியிருக்கிறது. தனியாள் சாதனையை மையப்படுத்தி, போட்டியையும் கடும் உழைப்பையும் கொண்டவையாக தற்காலப் பணிகள் அமைந்திருக்கின்றன. எனவே இப்பணிகளின் தன்மைக்கேற்ப தங்களை உருமாற்றிக்கொள்வது மனிதர்களுக்கு அவசியமாகிறது. அதற்கு இப்புத்தகம் உதவியாக இருக்கிறது. பல நுட்பங்களை விளக்குகிறது.

பன்னிரண்டு பகுதிகளைக் கொண்டதாகவும் ஒவ்வொரு பகுதியும் பல தலைப்பிட்ட கட்டுரைகளைக் கொண்டதாகவும் பிரித்தமைக்கப்பட்டுள்ளது. கட்டுரைகளின் தலைப்புகள் அனைத்துமே ஓர் தன்னம்பிக்கை புத்தகத்தின் தலைப்புகளைப் போல் இருக்கின்றன. தாமரை இலைத் தண்ணீர், நல்ல வேலிகள் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.

நேரந்தவறாமை முக்கியம் என்பதை ஆசிரியர் ஓர் கட்டுரையில் வலியுருத்தியிருக்கிறார். தாமதம் என்ற ஒரே ஓரு காரணத்தினால் மட்டும் வேலையில் முன்னேறாதவர்கள் பலர் உண்டு. அதே சமயத்தில் சரியான நேரத்தில் வேலையை முடிப்பவர்கள் அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே உயர்ந்ததும் உண்டு. பல பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பணியை சரியான நேரத்தில் முடிப்பவர்கள் எனக் கணக்கிட்டால் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே தேறுவர். சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்காதவர்களின் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடித்தவரிடம் ஒப்படைத்ததையும், அதனால் நேரத்திற்குள்ளாக பணியை முடித்தவர் கூடுதல் பணப்பயனை பெற்றதையும் நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். சரியான நேரத்தில் ஓர் பணியை முடித்துக் கொடுத்த போது ஓர் அதிகாரி என்னை பாராட்டவும் செய்திருக்கிறார். அத்தகைய நேரந் தவறாமல் காரியத்தை முடிக்கும் பல விஷயங்களை ஆசிரியர் புத்தகத்தில் எழுதிருக்கிறார்.

உதவியாளர்களை மதியுங்கள் என்ற கட்டுரை பல நல்ல வெற்றியாளர்கள் தங்கள் உதவியாளர்களை கையாளும் விதத்தை எடுத்துக் கூறுகிறது. உதவியாளர்கள். நம் மன அழுத்தத்தைன் குறைக்கவும், வேலைகளை எளிதாக்கவும் சிரமமின்றியும் திறமையாகவும் முடிக்க உதவி செய்பவர்கள். தன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துக்கொண்டு எந்த வேலையையும் பிரித்துக் கொடுக்காத ஒருவர் நல்ல பணியாளராகவோ அல்லது மேலாளராகவோ விளங்க முடியாது என்பது மேலாண்மைத் தத்துவம். ஆசிரியர் தெளிவான உத்தரவுகள் குறிப்பிட்ட காலக் கெடு, போன்றவைகளை உதவியாளர்களுக்கு குறிப்பிடாதது, உதவியாளர்களை பாராட்டாமலும், குறை கண்டுபிடிப்பதும் உதவியாளர்களை தொடர்ந்து பாராமறிக்க முடியாமல் போவதற்கு காரணம் என்று குறிப்பிடுகிறார். மேலும் உதவியாளர்களை பெரிதாக நாம் பதிப்பதென்பது அவர்கள் முன்னேறுவதற்கு நிழலாக, வாய்ப்பாக இருப்பதும் கூடத்தான் என்ற உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகிறார்.

தாராளமாக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு எதையும் முடிக்காமல் இருக்கும் குழப்பவாதிகளுக்காக வேலைகளை வரிசைப்படுத்திக் கொள்ளும் முறையை வரைபடம் மூலம் விளக்கியிருப்பது அனைவருக்கும் உதவும். அடுத்த அத்தியாயத்திலேயே அடிக்கடி வேலைகளை நம்மிடம் தள்ளிவிடும் சுமையிறக்கிகளை சமாளிக்க, மறுப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார். அனைவருமே மறுக்கக் கற்றுக் கொள்வது அவசியமே இல்லையெனில் இரண்டு மூன்று பேர் செய்ய வேண்டிய வேலைகளை ஒருவராக செய்து ஓய்ந்து போக வேண்டியதுதான். தானாக வருவதை தடுப்பது ஒரு பக்கம் என்றால் அடுத்தவர் வேலையை ஆர்வக்கோளாரின் காரணமாக இழுத்துப் போட்டு கொண்டு விழிப்பதையும் ஆசிரியர் எழுத தவறவில்லை. அத்தகையோரை உங்களது திறமையைக் காட்டுவதற்காக மற்றவர்களின் வேலைகளுக்குள் கவனமின்றி கூட நுழைந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார்.

சிறப்பாக பைலிங் செய்வது, உரையாடல்களில் கொக்கிகளைப் பயன்படுத்து போன்ற நடைமுறை உத்திகள், மனநிலை உருவாக்கம், வேலையை விளையாட்டாக கருதிக் கொள்வது போன்ற உளவியல் விஷயங்களையும் ஆசிரியர் நூலில் விவரித்துள்ளார். ஒரு தனிமனிதனின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் பணி பற்றி ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் விஷயங்களையும், தனது பணியில் முன்னேற துடிப்பவர்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக “வேலையில் முன்னேற” நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

நூலின் இறுதி சூத்திரம் வேலை தேட வேண்டிய தருணம் ஒரே வேலையை செக்கு மாடு போல் செய்து கொண்டிருப்பவர்களுக்கான விழிப்புணர்வை உண்டாக்கும் சூத்திரம் ஆகும். இந்த நல்ல புத்தகத்தை நாம் அனைவரும் படிக்க வேண்டிய தருணம் இது. படித்து விசயங்களை அறிந்து கொண்டதோடு விட்டுவிடாமல் ஒவ்வொரு சூத்திரங்களாக நம் வாழ்வில் அவற்றை பயன்படுத்திப் பார்க்க வேண்டும். ஏனெனில் எந்த ஒரு விசயமும் அதற்குண்டான பயன்பாட்டை அடையும் போதுதான் முழுமை பெரும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்: URL IS: http://nhm.in/shop/978-81-317-2962-5.html

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP