உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை

Monday, June 29, 2009

ஆபாச சி.டி மோகம் (page 1) – ஜுனியர் விகடன் 01-07-2009

ஆபாச சி.டி மோகம் (page 2) – ஜுனியர் விகடன் 01-07-2009

Sunday, June 21, 2009

புத்தக விமர்சனம்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

என்ற ஒரு குறளை மட்டும் மையமாக வைத்து அதற்கு விரிவான விளக்கவுரை எழுதினாற் போன்று வெளிவந்துள்ள புத்தகம் தான் “செல்வம் சேர்க்கும் விதிகள்” நூலாசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர் செல்வ செழிப்போடு விளங்க சிறப்பான 100 விதிகளை முன்வைத்திருக்கிறார். இந்த நூல் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதனோடு தொடர்புடைய விதிகள் விளக்கப்பட்டுள்ளன.

‘நினைப்புதான் பிழைப்பை கெடுக்கிறது’ என்று சொல்லியே நம்மை எதையும் நினைத்துப்பார்க்க கூட விடாத மனநிலையை கொண்டிருக்கும் சமயத்தில், அதுதான் செல்வந்தராக விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வை 18 விதிகளைக் கொண்டு விளக்கியிருக்கிறார் ரிச்சர்ட் டெம்ப்ளர் இந்த பகுதியை படிக்கப் படிக்கவே தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு நம்மை உயர்வு மனப்பான்மை கொள்ளச் செய்கிறார். சமுதாயத்தில் ஒருபுறம் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னொரு புறம் மேலும் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அங்கலாய்ப்புக்குக் காரணம் ஏழைகள் தங்களுடைய சூழ்நிலை, பின்புலம், வளர்ப்பு ஆகியவற்றின் காரணமாக ‘எனக்கு வேண்டாம்’ என்ற மனநிலையுடன் பணம் சேர்க்கும் விஷயங்களை அனுகுவது தான் என்ற ஏழ்மையின் உளவியலை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

நூலைப் படித்தால் பணக்காரர்களின் பண்புகளை தெரிந்து கொள்ளலாம். கடுமையாக உழைப்பவர்கள், ஒரு மாதத்தில் செய்யக் கூடிய வேலையை ஒரு நாளில் செய்பவர்கள், பணம் சம்பாதிப்பதை வேடிக்கை போல புன்னகையுடனே செய்பவர்கள் என பணக்காரர்களின் குணங்களை கூறியிருக்கிறார் ஆசிரியர். பணக்காரர்கள் பணத்தால் வாழ்கிறார்கள், பணத்தால் மூச்சு விடுகிறார்கள், பணத்தால் தூங்குகிறார்கள் எனவே நீங்களும் பணக்காரராக வேண்டுமானால் அவர்களோடு பேசிப்பாருங்கள், அவர்களை எப்படி பணக்காரர்களாக மாறினீர்கள் என்று வேள்வி கேளுங்கள், அவர்களின் வாழ்க்கை முறையை கூர்ந்து கவனியுங்கள் என்று கூறியிருப்பது யதார்த்த அணுகுமுறையும் பயிற்சியும் ஆகும். முதல் பகுதி மொத்தமாக உங்களின் மனோதத்துவத்தை மாற்றியமைக்கும். பணக்காரராக மாற வேண்டும் என்று மன அளவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வரை பணக்காரராக வாய்ப்பில்லை. அதுவே மிகவும் முக்கியம் என்ற அடிப்படையை மையமாக வைத்தே முதல் பகுதியின் எல்லா விதிகளும் எழுதப்பட்டுள்ளன.

நிறையப் பேர் பணத்தை தேடிப் போகாததற்கு காரணம் அவர்கள் நிம்மதியை நாடிச் செல்வது தான். பணம் வரவர நிம்மதி குறையும் என்பது பரவலான நம்பிக்கை. ஓசோவும் கூட

“பணத்தை அடைந்தான் தூக்கத்தை இழந்தான்,
தூக்கத்தை அடைந்தான், பணத்தை இழந்தான்’ என்று கூறி எதாவது ஒன்றைத்தான் உங்களால் அடைய முடியும் என்று போதனை செய்திருக்கிறார். ஆனால் இப்படியெல்லாம் நடந்தால் நீங்கள் பணத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என கூறும் டெம்ப்ளர், பணமும் சம்பாதிக்கலாம் – நிம்மதியாகவும் தூங்கலாம் என அதற்கான வழிமுறைகளையும் சொல்கிறார்.

இரண்டாவது பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள விதிகள் அனைத்துமே செல்வந்தராவதற்கான நடைமுறை சாத்தியங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன. செல்வந்தராவதற்கு அவர்களைப் போன்ற தோற்றம் அவசியம். நேர்த்தியாக உடையணிந்து உற்சாகமாக செல்லும்போது பிறர் நம்மை வரவேற்பதற்கும் சற்றே சரியில்லாமல் ஏனோதானோ என்று உடையணிந்து செல்லும்போது பிறர் நம்மை வரவேற்பதற்கும் நிறைய வித்தியாசத்தை நான் கண்டிருக்கின்றேன். ஒருநாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வேகவேகமாக கார்கள் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது ஒரு காரே இவ்வளவு வேகமாக செல்கிறதே, இரண்டு கார்கள் ஒன்று சேர்ந்தால் எல்லா கார்களையும் விரைவில் கடந்து சென்று விடுமே என்று நினைத்தேன். வீட்டுக்கு வந்து சேரும் போது நாம் ஒரு ஆள் வேலையை மட்டுமெ செய்து கொண்டிருக்கிறோம் இரண்டு ஆள் வேலையை செய்தால் முன்னேறி விடுவேன் என்ற யோசனை மனதில் தோன்றியது. கடுமையாக உழைப்பைத் தவிர வேறு எதையும் டெம்ப்ளர் முன் வைப்பதில்லை. ஆனால் சிறுசிறு குறிப்புகளை கொடுக்கிறார். நமக்காக உழைக்க வேண்டும், பணம் வரும் வழியிலேயே உழைக்க வேண்டும். பணக்காரராக வேண்டும் என்பதற்காக சிறு சிறு செலவுகளை கூட செய்யாமல் கஞ்சனாக இருக்க வேண்டியதில்லை என்பது போன்ற நுணுக்கமான குறிப்புகள் நாம் நம்பி வந்தவைகளை மற்றி சரியான பாதைய்யில் நம்மை செலுத்தும் வல்லமை கொண்டவை. பங்கு மார்கெட் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார் டெம்ப்ளர். அதற்கென சில விதிகளை நிறுவி பங்கு மார்கெட்டின் அடிப்படையை புரிந்து கொள்ள செய்திருக்கிறார்.

பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இல்லையே என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு டெம்ப்ளர் சொல்வது “வாய்ப்புகள் நிறைய உள்ளன, அவைகளை நீங்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டால் போதும் உதைத்து ஸ்டார்ட் செய்ய வேண்டியது தான் நம் வேலை” என்பதாகும்.

செல்வந்தராவதற்கான வழிகளை சொன்ன இரண்டாம் பகுதியை கடந்து மூன்றாம் பகுதிக்குள் நுழைந்தால் இன்னும் பெரிய செல்வந்தராக அங்கே பல வழிகள் கூறப்பட்டுள்ளன. முயல் பண்ணை உதாரணம் மிகவும் சிறப்பானது. புதுவித சிந்தனை கொண்டிருப்பது, நவீன அறிவியில் முன்னேற்றங்களை பயன்படுத்திக் கொள்வது, விசய ஞானத்தை வளர்த்துக் கொள்வது, தன்னைம்பிக்கை ஆகியவற்றை இப்பகுதியில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

செல்வந்தராக நிலைக்கவைக்க 4ம் பகுதி விதிகளைச் சொல்கிறது . குறைவாக செலவு செய்து பணக்காரனாகப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு சீக்கு கோழியையும் சாயம் போகும் சட்டைகளையும் வாங்கி பணம் முழுவதையும் எப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிலர் என்று விளக்கியிருப்பது இந்த பகுதியின் சிறப்பாகும்.

பகுதி 5 சம்பாதித்த செல்வத்தை பிறரோடு பகிர்ந்து கொள்வதை விளக்கும் விதிகளை கொண்டுள்ளது. உங்களிடம் இருப்பதை உலகிற்கு கொடுங்கள். அது இரட்டிப்பாக உங்களுக்கு திரும்ப வரும் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது இப்பகுதி. ஆனால் எப்படி கொடுக்க வேண்டும் எவற்றுக்கில்லாம் கொடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகள் பல தெரிவிக்கப்பட்டுள்ளன.

புத்தகத்தில் உள்ள 100 விதிகளையும் படித்து முடித்தவுடன் நிறைய விதிகள் நமக்கு முன்பே தெரிந்தவைகள் போன்ற உணர்வு ஏற்படுகிறது அதை உணரும்முன்பே “நிறைய விதிகள் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் தெரிந்தவற்றை எத்தனை பேர் நடைமுறையில் செயல் படுத்துகிறீர்கள்” என்று கேள்வி கேட்டு நடைமுறையில் பலவீனர்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டி விடுகிறார் டெம்ப்ளர்.

“வாத்தை போலவே வாலாட்டுகிறது வாத்தை போலவே கத்துகிறது என்றால், அது வாத்தாகத்தான் இருக்கும்” என்று ஒரு விதியில் டெம்ப்ளர் குறிப்பிடுகிறார் அதைப்போல ஒரு சிறந்த புத்தகத்தைப் போல தோற்றமளிக்கிறது. ஒரு சிறந்த புத்தடகத்திற்கான கருப்பொருளை கொண்டுள்ளது. அப்படியானால் செல்வம் சேர்க்கும் விதிகள் ஒரு ...............

இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்:
http://nhm.in/shop/978-81-317-2560-3.html

Wednesday, June 17, 2009

பள்ளிகள்தோறும் வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி – தினமணி 14.06.2009

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP