உளவியல் சந்தேகங்கள்

உளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...

திருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை
Showing posts with label குழந்தையின் திறமை. Show all posts
Showing posts with label குழந்தையின் திறமை. Show all posts

Friday, February 3, 2012

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது எப்படி?

பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது தான். பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்களே

Tuesday, October 6, 2009

குழந்தைகளுக்கு என்ன திறமை உள்ளது என்பதையும் எதிர்காலத்தில் அவர்கள் என்ன துறையில் பிரகாசிப்பார்கள் என்பதையும் எப்படித் தெரிந்து கொள்வது?


ஒரு மனிதனின் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்வது நுண்ணறிவாகும். இதை ஐ.க்யூ என்று குறிப்பிடலாம். நுண்ணறிவு அதிகமாக உள்ள யாவரும் வெற்றியாளராகத் திகழ வாய்ப்புள்ளது. நுண்ணறிவு பற்றிய உளவியல் கோட்பாடுகளில் வலியுறுத்திக் கூறப்படும் விஷயம் யாதெனில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நுண்ணறிவும் அதோடு சிறப்பு நுண்ணறிவும் இருக்கும் என்பதுதான். உதாரணமாக ஒருவருக்கு பொது நுண்ணறிவும் அதோடு கணிதத்தில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு நுண்ணறிவும் இருக்கலாம். மற்றொருவருக்கு பொது நுண்ணறிவும் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு நுண்ணறிவும் இருக்கலாம். அதைப்போல உங்கள் குழந்தைக்கும் பொது நுண்ணறிவோடு எதாவதொரு சிறப்பு நுண்ணறிவு கட்டாயம் இருக்கும். பிற்காலத்தில் எந்த சிறப்பு நுண்ணறிவு தங்களிடம் இருக்கிறதோ அந்தத் துறையிலேயே குழந்தைகள் வல்லுநர்களாக விளங்குவார்கள்.

ஒரு குழந்தை பொம்மைகளை உடைத்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து “என் மகன் பெரிய இஞ்ஜினியராக வருவான்” என்றெல்லாம் குழந்தைகளின் எதிர்காலத்தை கணிக்க முடியாது. அதற்கு மாறாக உளவியல் முறை சோதனைகளைக் கொண்டு குழந்தைகளின் திறன்களைக் கணிக்கலாம். தற்போது குழந்தைகளின் நுண்ணறிவு, படிப்புத்திறன், எந்தப் பாடத்தில் சிறப்பாக படிக்கிறார்கள் என்பதை கண்டறிதல் போன்றவற்றை அளவிட உளவியல் சோதனைகள் உள்ளன. மேலும் குழந்தைகள் எந்தத் துறையில் ஆர்வம் கொண்வர்களாக இருக்கிறார்கள்? அவர்களின் நாட்டங்கள் யாவை போன்றவைகளைச் சோதிக்க தனித்தனி உளவியல் சோதனைகள் தற்போது உள்ளன. குழந்தைகளை அச்சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களின் திறன்களையும், துறைசார் ஆர்வங்களையும் கண்டறியலாம்.

பொதுவாக எந்த வயதில் குழந்தைகளை இச்சோதனைகளுக்கு உட்படுத்தலாம் என்ற கேள்வி எழும். நுண்ணறிவுச் சோதனைகளை எந்த வயதிலும் செய்து பார்க்கலாம். ஆர்வச் சோதனை, நாட்டச் சோதனை ஆகியவற்றை 10 வயதிற்கு மேல் 13 வயதிற்குள் செய்து குழந்தைகளின் ஆர்வம், நாட்டம் ஆகியவைகளை கண்டறிவது நல்லதாகும். பெற்றோர்களும் நாட்டில் என்னென்ன துறைகள் உள்ளன, அதற்கான வேலை வாய்ப்புகள் யாவை? புதிதாகத் தோன்றியுள்ள வேலை வாய்ப்புகள் யாவை? அவ்வேலைகளைப் பெற என்ன படிக்க வேண்டும் என்பனவற்றை தெரிந்தவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வேலைப் பெயர் அகராதி போன்ற நூல்களை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம்.

Visitors

web counter

About This Blog

  © Blogger templates 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP